துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் இரத்தினபுரி,அங்குலான மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அங்குலான பகுதியில் கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள்,ரவைகள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தீவிர விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
No comments: