News Just In

6/01/2021 08:20:00 AM

மட்டக்களப்பு தமிழர் முன்னேற்ற கழகத்தினால் கொரோனா நிவாரண பணிகள் ஆரம்பம்...!!


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தாக்கத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை வழங்கும் முதற்கட்ட நிகழ்வு தமிழர் முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் 31.05.2021 ம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான திரு.சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், தமிழர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் போது அங்கவீனமுற்றோர்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக இப்பணி ஏனைய பிரதேசங்களுக்கும் தொடர்சியாக நடைபெறும்.











No comments: