News Just In

6/01/2021 08:40:00 AM

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- 7 பேர் மண்ணினுள் புதையுண்ட நிலையில் மீட்பு...!!


கிளிநொச்சி ஏ-9 வீதியில் கொக்காவில் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல 4 .30 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் கொக்காவில் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகன சாரதி உட்பட 7 பேரும் மணலுக்குள் புதையுண்டு இருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி வாகனத்தை அதிவேகமாக செலுத்தியமையாலே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





No comments: