News Just In

6/09/2021 06:12:00 AM

மட்டக்களப்பில் நேற்று மாத்திரம் 186பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று(8) மாத்திரம் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான,

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 33 பேருக்கும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேருக்கும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேருக்கும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும்
செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27பேருக்கும்
பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும்
வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்
ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்
கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்
மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் 03 பேருக்கும், சிறைச்சாலையில் 07 பேருக்குமாக நேற்று மாத்திரம் 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் , ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக 3 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்லுகின்ற காரணத்தால் தேவையில்லாமல் பொதுமக்கள் பயணைத்தடையை மீறி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

No comments: