வெள்ளம், மண்சரிவு, பலத்த காற்று, மரம் முறிந்து வீழ்தல் போன்ற சீரற்ற காலநிலையினால் உண்டான அனர்த்தங்கள் காரணமாக நாடு முழுவதும் 67,613 குடும்பங்களைச் சேர்ந்த 2,71,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 88 பிரதேச செயலாளர் பிரிவுகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தோர் - 05
காணாமல்போனவர்கள் - 02
முழுமையாக சேதமடைந்த வீடுகள் - 17
பகுதியளவிலான வீடுகள் சேதம் - 978
பாதுகாப்பான நிலையங்கள் - 106
பாதுகாப்பான நிலையங்களில் உள்ள குடும்பங்கள் - 6,177
பாதுகாப்பான நிலையங்களில் உள்ள நபர்கள் - 26,806
உறவினர்களின் வீடுகளில் உள்ள குடும்பங்கள் - 5,710
உறவினர்களின் வீடுகளில் உள்ள நபர்கள் - 22,975
No comments: