News Just In

6/07/2021 08:07:00 AM

தனிமைப்படுத்தலில் இருந்து 11மாவட்டங்களை சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு...!!


இலங்கையில் கொரோனா தொற்று நிலை அதிகமாக காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 11 மாவட்டங்களின் 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உடன் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்

இதன்படி மேல்மாகாணத்தின் கொழும்பு கம்பஹா களுத்துறை மாவட்டங்களில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உட்பட ரத்தினபுரி நுவரெலியா திருகோணமலை மாத்தளை முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு காலி ஆகிய மாவட்டங்களின் 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உடன் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்





No comments: