News Just In

5/21/2021 09:34:00 AM

புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை இணக்கம்!!


புதிய சட்டமா அதிபராக பதில் சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சட்டமா அதிபராகக் கடமையாற்றும் தப்புல டி லிவேரா எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில் , புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராக மீண்டும் நியமிப்பதற்கும் நாடாளுமன்ற பேரவை பரிந்துரைத்துள்ளது.

மேலும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர் பதவி மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான பெயர்களும், நாடாளுமன்ற பேரவையினால் இன்று பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: