News Just In

5/23/2021 07:37:00 AM

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு...!!


இலங்கையில் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

No comments: