மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு இணங்க குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ் .பி .பண்டார தலைமையிலான பொலிஸ் புலனாய்வு குழுவினரினால் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 48 டின்கள் மற்றும் 9 போத்தல்களுடன் இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க முன்னெடுத்துவரும் நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: