News Just In

5/31/2021 10:37:00 AM

திருகோணமலை- கந்தளாய் வான்எல குளம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்...!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல குளத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.வான்எல விஹாரகலா பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிலங்களை கையகப்படுத்தி வந்த சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில அத்துக்கோரலவின் மேற்பார்வையில் வான்எல குளத்தின் புனரமைப்பும்,அப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாடுகழையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கந்தளாய் வான்எல பகுதியில் இனந்தெரியாத சிலரினால் அப்பகுதியில் உள்ள நிலங்கள் கையப்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகளினால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் விவசாயிகளின் நலன்கருதி குளத்தினை புனரமைத்து,தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றி அமைத்து, மக்களின் பயன்பாட்டுக்காக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.




No comments: