News Just In

5/16/2021 03:53:00 PM

பொத்துவில் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி...!!


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் உடும்பன் குளம் செல்வவெளி வயல் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொத்துவில்-15 களப்புக்கட்டை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்னும் சந்தேக நபர் இருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.



No comments: