நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை வழங்கக்கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு இணையாக இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக 10 நாட்களில் 10,000 கட்டில்கள் எனும் செயல்திட்டமொன்று நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கு அமைவாக மட்டக்களப்பு இளைஞர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள உன்னத பணியை மிகவும் திறம்பட ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: