News Just In

5/14/2021 02:21:00 PM

பயணத் தடை காரணமாக முடங்கியது ஏறாவூர் நகரம்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரம் நோன்புப் பெருநாள் தினமான வெள்ளிக்கிழமையன்று 14.05.2021 முற்றாக முடங்கிக் காண்ப்பட்டது.

சரித்திரத்தில் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தினத்தன்று ஏறாவூர் நகரம் இவ்வாறு சன நடமாட்டமின்றி வெறிச்சோடியது இதுதான் முதல் தடவை என்று மூததோர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் அபாயத் தொற்றின் காணரமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணத் வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இதேபோன்ற நடமாட்டத் தடை நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமையிலிருந்து நாளாந்தம் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏறாவூர் நகரம் முற்றுமுழுவதுமாக வெறிச்சோடியிருந்த அதேவேளை நகரின் பிரதான வீதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கண்காணிப்பு சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

பள்ளிவாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. அதேவேளை வழமையாக பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படும் திடல்களும் மைதானங்களும் கூட பூட்டப்பட்டிருந்தன.









No comments: