News Just In

5/07/2021 04:00:00 PM

திருகோணமலை- கந்தளாயில் இரண்டு பௌசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- இருவருக்கு பலத்த காயம்...!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ஆம் கட்டை சந்திப் பகுதியில் இரண்டு பௌசர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(7) 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருட்களை ஏற்றிச் சென்ற பௌசர் வாகனமொன்றும்,குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற பௌசர் வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் 35 மற்றும் 46 வயது சாரதியொருவரும் உதவியாளர் ஒருவருமே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





No comments: