News Just In

5/31/2021 08:28:00 PM

மட்டக்களப்பில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு...!!


மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்டமூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை (01.06.2021) காலை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று (31) திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த 18.05.2021 ஆந் திகதி முதல் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாக முடக்கபட்ட நிலையில் இவ்வாறாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பாலமீன்மடு, கல்லடி வேலூர், திருச்செந்தூர் ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே நாளை காலை முதல் விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் நொச்சிமுனை, சின்ன ஊறணி ஆகிய இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments: