News Just In

5/22/2021 07:34:00 AM

மட்டக்களப்பு- ஓட்டமாவடி பகுதியில் பாதுகாப்புப் படையினரும், சுகாதாரப் பிரிவினரும் தீவிர கண்காணிப்பு!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினரும், சுகாதாரப் பிரிவினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று (21) வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், சுகாதாரப் பிரிவினர்கள் இணைந்து வெளியில் வந்தவர்களை சோதனையிட்டனர்.

இதில், தேசிய அடையாள அட்டையை சோதனை செய்ததுடன், அதன் இறுதி இலக்கத்துக்கு மாறாக வெளியில் செல்வோரின் அடையாள அட்டை இலக்கங்களையும் சட்ட நடவடிக்கைக்காக பதிவு செய்தனர். அத்துடன், வீதிக்கு வந்த நபர்களுக்கு உடல் வெப்ப நிலையும் சோதனை செய்யப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தலைமையில் இடம்பெற்ற இச் சோதனை நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர் யூ.எல்.எம்.ஜின்னா மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.






No comments: