News Just In

5/28/2021 10:31:00 AM

பொதுசன மாதாந்த உதவி கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவுகளை பெறாதவர்களுக்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
கொரோனா தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரயானத்தடை காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதியோர் கொடுப்பணவு மற்றும் பொதுசன மாதாந்த உதவி கொடுப்பணவுகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பெற்றுக் கொள்ளமாறு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒட்டமாவடி தபால் நிலையம் இன்று வெள்ளிக்கிழமை (28.05.2021) மற்றும் சனிக்கிழமை (29.05.2021) மதியம் 1.00 மணிவரை திறந்திருக்கும் என்பதனால் இதுவரை பொதுசன மாதாந்த உதவி கொடுப்பணவு (PAMA) மற்றும் முதியோர் கொடுப்பணவுகளை பெறாதவர்களது உதவி தொகைகளை பெற்றுக் கொள்வதற்கு சம்மந்தப்பட்டவர்களின் உறவினர்கள் உதவுமாறும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தாக்கம் காணப்படும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணியவாறு தபால் நிலையத்திற்கு சென்று தங்களுக்கான கொடுப்பணவுகளை பெற்றக்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்

No comments: