News Just In

5/28/2021 11:22:00 AM

பெண் வைத்தியரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் மொரட்டுவ நகர சபை மேயர் கைது!!


பெண் வைத்தியரை அச்சுறுத்தியமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்காக மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ மற்றும் மொரட்டுமுல்லா கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கச் சென்ற பெண் வைத்தியருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் மேயர் அச்சுறுத்தல் விடுத்தாக கூறப்படுகிறது.

கல்கிஸை பொலிஸாரிடம் வைத்தியர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட மேயர் மொரட்டுவ நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்.

No comments: