குறித்த பெறுபேறுகளுக்கு அமைய,
கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியை சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன் முதலிடத்தையும்
கலைப்பிரிவில் தெஹிவளை Presbyterian மகளீர் கல்லூரியின் சமல்கா செவ்மினி முதலிடத்தையும்
வணிக பிரிவில் காலி சங்கமித்தா மகளீர் பாடசாலையை சேர்ந்த அமன்தி மதநாயக்க முதலிடத்தையும்
உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் ஹொரணை தக்ஷிலா கல்லூரியை சேர்ந்த சுகிகா சந்தசரா முதலிடத்தையும்
பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் ஹொரணை தக்ஷிலா கல்லூரியை சேர்ந்த அவிஷ்க சானுக முதலிடத்தையும்
பெற்று குறித்த மாணவர்கள் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்று வௌியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 337 மாணவர்களும் பழைய பாடத் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 960 மாணவர்களும் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும்.
பரீட்சை பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டிற்காக இணைய வழியின் ஊடாக வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments: