News Just In

5/28/2021 09:45:00 AM

போதைப்பொருள் மற்றும் பணத்துடன் வெளிநாட்டவர் கைது...!!


வெளிநாட்டவர் ஒருவரை தெஹிவளைப் பகுதியில் வைத்து இன்றைய தினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து ஒருத்தொகை போதைப்பொருள், கடனட்டைகள், கைத்தொலைபேசிகள், மடிக்கணனிகள் என்பனவற்றுடன் 45,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மலாவி நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார். இவர் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: