News Just In

5/06/2021 12:55:00 PM

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 70 பாலை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற மூவர் கைது!!


எப்.முபாரக்
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 70 பாலை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற மூவரை இன்று(6) அதிகாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வென்ராசன்புர,ரஜஎல மற்றும் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 40,33, மற்றும் 37 வயதுடைய மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பரவிபாஞ்சான் பிரதேசத்திலிருந்து வென்ராசன்புர பகுதிக்கு உழவு இயந்திரமொன்றில் எழுபது பாலை மரக்குற்றிகளை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற போதே கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மரக்குற்றிகளுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.




No comments: