News Just In

5/27/2021 04:58:00 PM

6 துறைகளை அத்தியாவசிய சேவைகளாக கொண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியது...!!


நாட்டில் தற்போதைய நிலைமையை கருத்தில்கொண்டு சில துறைகளை அத்தியாவசிய தேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 6 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் துறைமுகம், பெற்றோலியம், பொது போக்குவரத்து அரச வங்கிகள், கிராம உத்தியோகத்தர் சேவை, அரச கள உத்தியோகத்தர்கள் ஆகிய துறைகளை மையப்படுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

No comments: