News Just In

5/30/2021 07:29:00 AM

நேற்று மேலும் 42 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 1405ஆக அதிகரிப்பு...!!


நாட்டில் மே மாதம் 29 ஆம் திகதி 06 கொவிட் மரணங்களும் மே 14 ஆம் திகதி தொடக்கம் மே 28 ஆம் திகதி வரை 36 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இறுதியாக இலங்கையில் 42 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், 2021 மே மாதம் 29 ஆம் திகதி 06 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

மேலும், மே மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 36 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மே 14 ஆம் திகதி ஒரு மரணமும், மே 19 ஆம் திகதி 02 மரணங்களும், மே 20 ஆம் திகதி 01 மரணமும், மே 21 ஆம் திகதி 02 மரணங்களும், மே 22 ஆம் திகதி 02 மரணங்களும், மே 23 ஆம் திகதி 03 மரணங்களும், மே 25 ஆம் திகதி 03 மரணங்களும், மே 26 ஆம் திகதி 02 மரணங்களும், மே 27 ஆம் திகதி 10 மரணங்களும், மே 28 ஆம் திகதி 10 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1405 ஆகும்.

இதேவேளை நேற்று (29) 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180,538 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 2,029 பேர் நேற்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 148,391 ஆக அதிகரித்துள்ளது.

No comments: