கல்முளை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று விசேட புலனாய்வு பிரிவின் பொலிசாருடன் இணைந்து சாய்ந்தமருது வேப்பையடி வீதியில் உள்ள வீடு ஒன்றினை சுற்றிவளைத்தபோது அங்கு ஜஸ் போதைபொருள் வியாபாராத்தில் இடுபட்டு கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 330 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டனர்.
அதேவேளை சிலாபாத்தைச் சேர்ந்த ஒருவரை 60 மில்லிக்கிராம் ஹரோயினுடனும், கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஒருவரை 350 மில்லிக்கிராம் கேரள கஞ்சாவுடனும்., மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 1490 மில்லிக்கிராம் ஹரோயினுடன் ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கைது செய்தவர்கள் 20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments: