நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 3,538 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 9 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.
31,840 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, தொற்றிலிருந்து மீண்ட 1,828 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 125,360 ஆக உயர்ந்தது.
இதே வேளை தொற்று சந்தேகத்தில் 1,772 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
No comments: