News Just In

5/22/2021 07:49:00 AM

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை- நேற்று மாத்திரம் 3547பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


நாட்டில் நேற்று(21) மாத்திரம் 3,547 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 158,333 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 3,538 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 9 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

31,840 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, தொற்றிலிருந்து மீண்ட 1,828 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 125,360 ஆக உயர்ந்தது.

இதே வேளை தொற்று சந்தேகத்தில் 1,772 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

No comments: