News Just In

5/22/2021 04:43:00 PM

பயணக்கட்டுப்பாடு அமுலில்- விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் 28 வயது இளைஞன் கைது...!!


நாடு பூராகவும் நடமாட்ட கட்டுப்பாடு அமுலாகியுள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 399 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


No comments: