பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மருதனார் மடத்தில் வைத்து சொகுசு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார் பெருந்தொகை மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட 240 சாராய போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தையும் பொலீசார் கைப்பற்றியுள்ளனர்.
வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சான்றுப் பொருட்களும் சாரதியும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments: