News Just In

5/21/2021 01:27:00 PM

1000 இற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா- 05 குழந்தைகள் உயிரிழப்பு...!!


இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வேகமாக கொவிட் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக நோய் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் அவர்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: