அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 696 ஆக அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் லெவ்ல பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தென்னெகும்புர பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மாலம்பே பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும், கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும், வரகாமுர பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்து உள்ளனர்.
No comments: