மட்டக்களப்பு மாவட்டம்- கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா வயல் பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய கணபதிப்பிள்ளை கணேசநாதன் என்பவர
இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக இவர் தற்கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் மூலம் அறியமுடிகின்றது
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: