திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஜீவா துரு உதயனாய வேலைத்திட்டத்தின் கீழ் கந்தளாயில் அமைந்துள்ள ஸ்ரீ போதி மண்டபத்திற்கான கலசம் அமைத்தலும் ஒரு இலட்சம் முருங்கை செடிகளும் விநியோகிக்கும் வேலைத்திட்டமும் இன்று(19) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரலவின் தலைமையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முருங்கை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான சமன் தர்சன பாண்டிக்கோரல, கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் விவசாய அதிகாரிகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
No comments: