News Just In

4/19/2021 07:53:00 PM

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கொரோனா தொற்று உறுதி...!!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்குக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை எய்மஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு, அனுமி உள்ளிட்டவற்றில் எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிக்கு நேற்று மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

No comments: