News Just In

4/02/2021 09:01:00 AM

பெரும்பாலான இடங்களில் சீரான வானிலை நிலவும்...!!


மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்யக் கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பாகங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலையில் மூடுபனி நிலைகளை எதிர்பார்க்கலாம்.

வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments: