News Just In

4/07/2021 04:11:00 PM

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த முதியவர் திடீர் மரணம்- பசறையில் அதிர்ச்சி சம்பவம்!!


வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவர், கீழே விழுந்த நிலையில் மரணமான சம்பவமொன்று, பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டத்தின் ரேந்தபொல பிரிவில், (இன்று) 07-04-2021ல் இடம்பெற்றுள்ளது.

ரேந்தபொல பிரிவு தோட்டத்தினைச் சேர்ந்த எஸ். இராமச்சந்திரன் என்ற 65 வயதுடைய நபரே, மரணமானவராவார்.

இவர் இன்று (07-04-2021) காலை தமது தோட்டக்குடியிறுப்பிற்கு முன்னாலுள்ள வீட்டுத் தோட்டத்தில், தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். அந்நிலையில், அவர் கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, அவரது மனைவி தனது கணவருக்கு தேநீர் கொண்டு சென்ற வேளையில், அவர் கீழே விழுந்திருக்கக் கண்டு, அவரைத் தூக்க முயற்சித்த வேளையில், அவர் இறந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இது குறித்து, பசறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசாரும் அங்கு வந்துள்ளனர்.
விசாரணைகள் தொடர்கின்றன. மாரடைப்பு இம் மரணத்திற்கு காரணமாக இருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது.

No comments: