News Just In

4/02/2021 12:48:00 PM

மனைவியை கொலை செய்து தானும் உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்! கிளிநொச்சியில் சம்பவம்!!


கிளிநொச்சி-சிவபுரம் பகுதியில் கணவன் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகராறுகள் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயும்,38 வயதான தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: