மேலும் அந்த அனுதாப செய்தியில், இந்தியாவின் அணு நாயகனாக விளங்கும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நேரடி சிஷ்யன் இவர். இவரை அண்மையில் பாராட்டி கௌரவிக்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்தோம். அந்த சந்திப்பின் போது அவர் இயற்கை மீது கொண்டிருந்த பற்றையும், கௌரவத்தையும் எங்களால் உணர முடிந்தது. கலைஞர் விவேக் மரணித்தாலும் அவரின் நகைச்சுவைகளுக்கு என்றும் மரணம் இல்லை. இவரின் நகைச்சுவை பகுத்தறிவு கொண்டவை. இனி பகுத்தறிவுக்கு திரையுலகில் பஞ்சம் ஏற்படும் என்பதே உண்மை.
ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை இவர் முன்னெடுத்திருந்தார். மரம் நாடும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்த இவரின் இலக்கை அடைய இவரின் சகல ரசிகர்களும், அபிமானிகளும் மரம் நடும் பணியை செய்வதே இவருக்கு வழங்கும் உயரிய மரியாதையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
No comments: