ஆலயங்களில் வழமையான பூஜை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவித கூட்டுச் செயற்பாடுகளையோ, ஒன்றுகூடல்களையோ அனுமதிக்கக் கூடாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலயங்கள் மற்றும் அதன் வளாகங்களில் சமூக இடைவெளியை பேணி, ஒன்றுக்கூட கூடியவர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சமூக இடைவெளியை பேணி, 50 பேரை வழிபாட்டுக்கு அனுமதிக்க கூடிய இடவசதி இல்லாத ஆலயங்களில் பிரதேச பொது சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்படும் எண்ணிக்கைக்கு அமைய ஒரு சந்தர்ப்பத்தில் வழிபாட்டுக்கான நபர்களை அனுமதிக்க முடியும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
No comments: