News Just In

4/22/2021 11:31:00 AM

கொரோனா தொற்று அச்சம்- மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி ஒத்திவைப்பு...!!


இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்படுவது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 27 ஆம் தேதி பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள COVID-19 நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் ஒரு வருடமாக மூடப்பட்டுள்ளன

No comments: