News Just In

4/08/2021 05:53:00 AM

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 93962ஆக அதிகரிப்பு- இதுவரை 591 பேர் உயிரிழப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று(07) மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதன்கிழமை இரவு 10 மணி வரை 190 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 93 962 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 90 917 பேர் குணமடைந்துள்ளதோடு , 2267 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மரணங்களின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது.

No comments: