ஹரிவட்டுன பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் மரணித்தார்.
கொரோனா நிமோனியா நிலை மற்றும் தீவிரமடைந்த சிறுநீரக நோய் இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அத்துடன் கரவெட்டி பகுதியை சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கொரோனா தொற்று மற்றும் குருதி விஷமானமை காரணமாக நேற்றைய தினம் அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments: