21 ஆவது மாணவர் படையணியின் கெடட் சார்ஜன் மேஜராக கந்தளாய் அல் தாரீக் மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த பாரீஸ் முகம்மட் ஆக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கெடட் போட்டிகளின் போதே இவர் "கெடட் சார்ஜன் மேஜராக" தெரிவாகியுள்ளார்.
இம்மாணவன் கடந்த வருடம் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கெடட் கொமாண்டிங் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதும் விசேட அம்சமாகும்,இம் மாணவனுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டவர் பொலிஸ் திணைக்களத்தின் மாணவர் பயிற்றுவிப்பாளர் திரு அஜித் அகும்.
இவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த முகம்மட் பாரீஸ் மற்றும் நிகாரா ஆகியோரின் செல்வப் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments: