News Just In

3/18/2021 01:21:00 PM

மட்டக்களப்பு- தாந்தாமலை ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வு!!



மட்டக்களப்பு- தாந்தாமலை ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வொன்று இன்று நாற்பதுவட்டையில் இடம்பெற்றது. நாற்பதுவட்டை மற்றும் தாந்தாமலை கிராமங்களை மையப்படுத்தியதாக இந்தப் பாலர் பாடசாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தினுடைய முற்றுமுழுதான நிதி அனுசரணையில் தொடர்ந்து இடம்பெறும்வகையில் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட 20 பாடசாலைகளுக்கு குத்து விளக்குகளும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.

ஆலய பரிபாலன சபையின் தலைவர் மு.அருணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் மற்றும் பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.







No comments: