News Just In

3/22/2021 05:17:00 AM

மட்டக்களப்பு- கொடுவாமடு மக்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது!!


மட்டக்களப்பு- ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இலுப்படிச்சேனை, கொடுவாமடு கிராம மக்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் முயற்சியில் செங்கலடி - பதுளை வீதியில் உள்ள வறிய கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டமானது கட்டம் கட்டமாக கடந்த 4 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி இன்று ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பதுளை வீதி கொடுவாமடு மக்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டத்தினை பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வாணந்தன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களினால் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாகப் பெற்றுக் கொடுக்கப்பட்ட நிதியினையும், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் நிதி பங்களிப்பினையும் கொண்டு மேற்படி மேற்படி குடிநீர் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஊடாக பல வருடங்களாக குடிநீர் வசதிகள் இன்றி அவதியுற்ற இப் பிரதேச மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு நீர்; வழங்கல் சபையுடன் பிரதேச சபையும் இணைந்து செயற்படுவதன் ஊடாக அதிகமான பயணாளிகளுக்கு குடி நீரினை வழங்க முடிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






No comments: