News Just In

3/21/2021 08:21:00 AM

அம்மன் மகளிர் இல்லம் பவுண்டேசனில் தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!!


அம்மன் மகளிர் இல்லம் பவுண்டேசன் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் nமைப்பின் பணிப்பாளர் வி.வாமதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய தொழிற் பயிற்சிக் கற்கைகள் நிறுவகத்தின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் கி.பத்மநாதன், மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி சிறுவர் பாhமரிப்பு மற்றும் அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் புவிராஜ், திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி சிறுவர் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் க.மோகனதாஸ் சுவிஸ் தமிழர் எயிட் (ஸ்டா) அமைப்பின் பிரதிநிதி வி.கமலதாஸ், போரதீவுப் பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சு.விக்னேஸ்வரன், வளவாளர்களான கு.தேவராஜன், சக்திவேல், திருமதி யசோ துஸ்யந்தன், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நளினி விநாயகரமணி மற்றும் அம்மன் மகளிர் இல்ல நிறுவகத்தின் பிரதிநிதிகள், பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்தோர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் எயிட் (ஸ்டா) மற்றும் பொன்டானா அமைப்பின் அனுசரனையுடன் அம்மன் மகளிர் இல்லம் பவுன்டேசன் மூலம் அழகுக்கலை, சமையல், விடுதி முகாமைத்துவம், தையல், முன்பள்ளி ஆசிரியர் போன்ற பயிற்சி நெறிகள் பயிற்றுவிக்கப்பட்டு, பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















No comments: