News Just In

3/18/2021 07:38:00 PM

மட்டக்களப்பு- வாக்கரையில் முந்நூறு ஏக்கர் நிலத்தில் தானியப்பயிர்ச் செய்கை!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் மாவட்ட செயற்பாட்டாளர் ப.சந்திரகுமார் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வித்திடல் நிகழ்வை ஆரம்பம் செய்தார்.

சோலை விவசாய அமைப்பின் தலைவர் தி.சிவநிதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராணுவ கட்டளையதிகாரி மேஜர் சில்வா மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின்கீழ் வாகரையில் முந்நூறு ஏக்கர் நிலத்தில் உழுந்து, பயறு, கௌபி, கச்சான் மற்றும் குரக்கன் போன்ற தானியப்பயிர்கள் செய்கை பண்ணப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







No comments: