ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள மகளீர்களை இணைத்து இந்த நிகழ்வு நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அதிதிகளின் உரைகள் நடைபெற்றதனைத் தொடர்ந்து சாதனை பெண்களாக தெரிவுசெய்யப்பட்ட ஆரையம்பதியை சேர்ந்த அசோகராசா கௌரி, கிரான்குளத்தை சேர்ந்த கந்தசாமி கண்ணகை, புதுக்குடியிருப்பை சேர்ந்த பாக்கியராசா அழகம்மா மற்றும் மாவிலங்கத்துறையைச் சேர்ந்த மங்கலம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட மண்முனைபற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி, சிரேஷ்ட சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரின் இணைப்புச் செயலாளருமான திருமதி. மங்களேஸ்வரி சங்கர் மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார் ஆகியோர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் தயானந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான தினேஷ், கந்தசாமி மற்றும் சுந்தராம்பாள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கிராம உத்தியோகத்தர்களான ர.புவலெட்சுமி, வி.மனோஜா, க.அபிஷேகா, நி.மிருஜினி, கி.தயனி மற்றும் அ.சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: