இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் W.M.M.B. வீரசேகர தெரிவிக்கின்றார்.
இதற்கமைய, குறித்த பிறப்புச் சான்றிதழின் தரவுகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த புதிய தேசிய பிறப்புச் சான்றிதழில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து தரவுகளும் உள்ளடக்கப்படுமெனவும் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போதுள்ள பிறப்பிச் சான்றிதழ்கள் புதிப்பிக்கப்பட்டு புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுனெமனவும் பதிவாளர் நாயகம் W.M.M.B. வீரசேகர தெரிவிக்கின்றார்.
No comments: