News Just In

3/09/2021 09:16:00 AM

மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேசத்தில் மகளிர் தினத்தில் மருத்துவிச்சிமார்களை கௌரவிக்கும் நிகழ்வு!!


கதிரவனின் 45 ஆண்டுகள் 45 நிகழ்வுகளில் 10 ஆவது நிகழ்வாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேசத்திலுள்ள மருத்துவிச்சிமார் கௌரவம் வீடு வீடாகச் சென்று இடம்பெற்றது.

முதற்கட்டமாக முதலைக்குடா, அரசடித்தீவு, கற்சேனை, கடுக்காமுனை, அம்பிளாந்துறை, கிராமங்களிலுள்ள மருத்துவிச்சிமார் கௌரவம் பெற்றனர்.

இந்நிகழ்விற்கு கிண்ணியா கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு செ.சத்திதாஸ், அழ யோகராசா, தங்க யுவன் ஆகியோர் ஆகியோர் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கதிரவன் தலைவர் கதிரவன் த. இன்பராசா, செயலாளர் கவிஞர் அழகு தனு, உபதலைவர் சோலையூரான் ஆ. தனுஸ்கரன், இணைப்பாளர் பாலமீன்மடு இரா கலைவேந்தன் முதலானோர் பங்குபற்றினர்.







No comments: