News Just In

3/17/2021 09:25:00 PM

மன்னார்- திருக்கேதீச்சரம் கெளரியம்பாள் உயர் தரப் பாடசாலையின் வைரவிழா ஆண்டில் இரு திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது!!


திருக்கேதீச்சரம் மன்/கெளரியம்பாள் உயர் தரப் பாடசாலை வைரவிழா காணும் இவ் ஆண்டிலே இரு திறன் வகுப்பறைகள் இன்று (2021.03.17) திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திரு த.கோகிலராஜா தலைமயில் மன்னார் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திரு கே.ஜெ.பிறட்லி அவர்களால் இன்று இரு திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், மன்னார் கோட்டக் கல்வி அலுவலர் திரு.சந்தியோகு, உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) திரு.மனோரஞ்சன், சிவனருள் சிறுவர் அபிவிருத்தி நிலையம், சிவனருள் விடுதி(ஆண்கள்,பெண்கள்)ஆகியவற்றின் பொறுப்பாளர், ஓய்வுநிலை அதிபர் திரு.செல்வரஞ்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

திறன் வகுப்பறை உபகரணங்கள் மனிதநேய அமைப்பினரால் அன்பளிப்பு செய்யப்பட்டது. மனிதநேய அமைப்பானது பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் தொடர்ந்து பலவருடங்களாகப் பங்காற்றிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.










No comments: