மருதமுனை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மேற்பார்வையில் மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகம் ஐந்தாவது வருடமாக நடாத்துகின்ற "மருதம் வெற்றிக் கிண்ண சுற்றுத் தொடர்" போட்டிகள் மார்ச் 27, 28, மற்றும் ஏப்ரல் 03, 04ஆம் திகதிகளில் மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அணிக்கு 11பேர் கொண்ட 10 ஓவர் விலகல் முறையிலான
இச்சுற்றுத் தொடரில் மருதமுனையைச் சேர்ந்த மருதம் வி.க, பென்சின் வி.க, கிறிஸ்டல் வி.க, ஒலிம்பிக் வி.க, ஜாயா வி.க, எலைற் வி.க, கல்பனா வி.க, கோல்ட் மைன்ட் வி.க, கிங்ஸ்டன் வி.க, கலெக்சி வி.க, யுனிவெஸ் வி.க, அக்பர் வி.க, மிமா வி.க, பிரிஸ்பேர்ன் வி.க, கிரேஸ்ட் வி.க, மெசெஞ்சர்ஸ் வி.க போன்ற 16 அணிகள் பங்குபற்ற உள்ளதுடன் வெற்றி பெறும் முதல் இரண்டு அணிகளுக்கு பெறுமதியான கிண்ணமும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது
என மருதம் விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.மனாஸ் தெரிவித்ததுடன் சுற்றுப் போட்டி தொடர்பான விபரங்கள் மருதமுனை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சுற்றுப் போட்டித் தலைவர் அப்துல் சலாமிடம் செயலாளர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.
No comments: